search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் வெட்டிக் கொலை"

    கோவையை அடுத்த சூலூரில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூர் பாப்பம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அஜய் குமார் (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அஜய் குமார் வீடு அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது கழுத்து, தோள், கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அஜய்குமார் நேற்று இரவு 10 மணி அளவில் தனது தந்தை ஆனந்த்குமாரிடம் ரூ.100 வாங்கிக் கொண்டு, மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பிறகு நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார்.

    அதன் பிறகு என்ன நடந்தது? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது?அஜய் குமாருடன் பேக்கரிக்கு சென்ற நண்பர்கள் யார்- யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஜய்குமார் கடந்த சில நாட்களுக்கு வேலைக்கு செல்ல வில்லை என கூறப்படுகிறது. காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல் நியூ அண்ணாநகரை சேர்ந்தவர் ராம்பாபு. இவரது மகன் சிரஞ்சீவி (வயது 28), பெயிண்டர். நேற்று மாலை வேலைக்கு சென்ற அவர் திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதி நேரு நகரில் சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிரஞ்சீவியின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் கள்ளக்காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    சிரஞ்சீவிக்கும் அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தில் கணவருடன் வசிக்கும் ஜெயலட்சுமிக்கும் கள்ளக்காதல் இருந்தது. திருமணத்துக்கு முன்பே ஜெயலட்சுமியும் சிரஞ்சீவியும் காதலித்து வந்தனர்.

    இதையடுத்து திருமணம் ஆன பின்பும் ஜெயலட்சுமி அவருடன் காதலை தொடர்ந்தார். இதனை அறிந்த ஜெயலட்சுமியின் கணவர் ஜானகிராமன் கண்டித்தார்.

    இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஜெயலட்சுமி கணவருடன் வாழ முடியாது என்று கூறி ஆவடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

    மேலும் அம்பத்தூரில் உள்ள மகளிர் விடுதியில் தனியாக தங்கி இருந்தார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில் சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக ஜானகிராமனை போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    விசாரணைக்கு பின்னரே சிரஞ்சீவி கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? கூலிப்படையை ஏவி தீர்த்துக் கட்டப்பட்டாரா? என்ற விவரம் தெரியவரும்.

    கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×